சென்னை:
மைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், செந்தில்பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்,