சென்னை

மிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. அதன்படி செந்தில் பாலாஜியிடம் ஐந்து நாட்கள் விசாரணை நடத்திய பின்னர் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் முன்னிறுத்தப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் (வரும் 29-ம் தேதி) வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு 6-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.