சென்னை

மிழக அரசு  பத்திரப்பதிவின் போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டுள்ளது  .அதாவது கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் எனப் பதியப் படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்கத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறைத் தலைவரால் தனியே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.