சென்னை

மிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 34 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.

தறொஈது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது.  இன்றுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு செந்தில் பாலாஜி பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனால் 34-வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  நீதிமன்றக் காவல் முடியும் ஏப்ரல் 25-ம் தேதி காணொளியில் ஆஜராகும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அசல் ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவில் ஓரிரு நாளில் வாதங்கள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.