டில்லி

ச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு 3 முறை தாக்கல் செய்த மனுவை, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் இந்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.  மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி தள்ளுபடி செய்தார்.

இதையொட்டி செந்தில் பாலாஜிக்கு  ஜாமீன் கோரி அவர் சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.