டில்லி

ற்போதைய மாண்டியா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான சுமலதா சுயேச்சையாக போட்டியிட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

.

தற்போது மண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் முன்னாள் நடிகை சுமலதா. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலும் மாண்டியாவில் போட்டியிட முடிவு செய்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு மண்டியா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலில் சுமலதா போட்டியிடுவாரா? அல்லது கடந்த முறை போன்று தற்போதும் சுயேச்சையாகப் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில்  சுமலதா செய்தியாளர்களிடம்-

”நான் பாஜக மேலிடம் விடுத்த அழைப்பின் பேரில் டில்லிக்கு வந்து ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசி இருந்தேன்., நாடாளுமன்றத் தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக எனது விருப்பத்தை ஜே.பி.நட்டாவிடம் தெரிவிதேன். இன்று நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பது பற்றி எனக்குத் தெரிவிப்பதாக ஜே.பி.நட்டா கூறியுள்ளார். 

நான் நாடாளுமன்றத் தேர்தலில் மாண்டியாவில் போட்டியிட்டு, முதல் முறையாக மாண்டியாவில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்று விரும்பினேன்.  பாஜகவை மாண்டியாவில் பலப்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணம். ஒருவேளை மண்டியா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட சீட் கிடைக்காவிட்டால், நான். சுயேச்சையாக மண்டியாவில் போட்டியிட மாட்டேன். 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி குறித்து பாஜக எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன். என்னை பாஜக கைவிடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சிக்பள்ளாப்பூரில் தொகுதியில் போட்டியிட இருப்பதாக வரும் தகவலும் உண்மை இல்லை. நான் தற்போது சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால் பதவிக்காலம்  முடிந்ததும், கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் சேர உள்ளேன்.” 

என்று தெரிவித்துள்ளார்.