லக்னோ:  
த்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான லலிதாஷ் பதி திரிபாதி, தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
லலிதாஷ் பதி திரிபாதி, உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது மூத்த தலைவராக இருப்பதுடன், காந்தி குடும்ப விசுவாசியாகவும் இருந்துள்ளார். இது உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.