ஜெய்ப்பூர்: 
மரீந்தர் சிங் கட்சியின் நலனுக்காக வேலை செய்ய வேண்டும் என்று  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவுரை வழங்கியுள்ளார்.
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
இதையடுத்து அதன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. 80 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் பஞ்சாபின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வழங்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நேற்று அம்பிகா சோனி சந்தித்துப் பேசினார். அப்போது ராகுல் காந்தியிடம் பேசிய அம்பிகா சோனி,  பஞ்சாப் முதல்வராகப் பதவி ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதுடன்,  சீக்கியர் ஒருவரை நியமிக்கப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது கருத்தை டிவிட்டர்  வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கட்சி நலன்களுக்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், அவர் கட்சியின் நலனுக்காக பணியாற்றுவர் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான லலிதாஷ் பதி திரிபாதி, தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.