சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி நேற்று (12ந்தேதி) ஓய்வுபெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட மூத்த நீதிபதி துரைசாமி, இன்று  உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமைநீதிபதியாக, கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி  நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார். முதலில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், பிறகு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். நேற்றுடன் அவருக்கு 62 வயது நிறைவடைந்ததையடுத்து நேற்று மாலையுடன் பணி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி துரைசாமி அறிவிக்கப்பட்டார். அதன்படி, இன்று எம்.துரைசாமி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார்