சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக   அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பழம்பெரும் இயக்குனரான எஸ்.பி.முத்துராமன் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கி உள்ளார். இவருக்கு கடந்தசில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து,   சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது  உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் மெட்வே  மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.