டில்லி

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 17 ஆம் தேதி அகில இந்தியக் காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகையை நியமித்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று டில்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்துப் பேசினார்.அப்போது செல்வப்பெருந்தகைக்கு மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை,

”விரைவில் தி.மு.க. உடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  தி.மு.க – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி என வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி ஆகும் . இரண்டாம் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் மேலிடத் தலைமையுடன்  நடைபெற உள்ளது.” 

என்று தெரிவித்தார்.