சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவில் சூர்யா புதிய கல்விக்கொள்கை, நுழைவு தேர்வு பற்றி பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது

எச்.ராஜா, தமிழிசை, கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் சூர்யாவின் கருத்தை வண்மையாக கண்டித்த நிலையில், சீமான் சூர்யாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார் .

புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசியதில் அரசியல் பார்க்கக் கூடாது.நான் பல ஆண்டுகளாக பேசுவதைத்தான் சூர்யா பேசியுள்ளார்.

கருணாநிதி ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள். ஆனால் சமச்சீர் கல்வி முறை என்பது இல்லை. கிராம பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஒரே தகுதி தேர்வு நேர்மையானதல்ல.

இது சம வாய்ப்பும் இல்லை. இதைத்தான் சூர்யா வெளிப்படுத்தியுள்ளார். புதிய என சீமான் கூறியுள்ளார்.