“பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்” என்று விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக சீமான் கூறியதாவது : “வியூக வகுப்பில் எனக்கு உடன்பாடில்லை, என் நாடு, என் மக்கள், என் நிலம், என் காடு, என் மலை எதை எப்படி செய்தால் சரியாக வரும் என்று தெரியாத நான் இந்த வேலைக்கு ஏன் வர வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
யாரை எங்கு நிறுத்தினால் வெல்லலாம் என்று இது கூட தெரியாமல் நான் எப்படி கட்சி தலைவராக இருக்க முடியும் என்றும் விமர்சித்தார்.
இந்த நாட்டை சிறப்புற ஆட்சி செய்தவர்கள் யாரும் இதுபோல் வியூகம் வகுக்கவில்லை என்றும் கூறினார்.
சமீபகாலமாக இந்த நோய் அனைவரையும் தொற்றிக்கொண்டது என்று கூறிய சீமான், “பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும். எத்தனை ஆறு, ஏரி, குளம், சமூக மக்கள், என்ன பிரச்சனை என்று எப்படி தெரியும்”
பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். எனக்கு நிறைய மூளை இருக்கு. காசு தான் இல்லை. அதனால் எனக்கு அது தேவையில்லை.
நாம் இதையெல்லாம் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.