சென்னை

மைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசு அளித்த தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக  கூறி உள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24-ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

நான் மத்திய அர்ச்கொடுத்த தரவுகளை வைத்து இந்த அறிக்கை வெளியிட்டுள்ளேன். மத்திய அர்சால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறி தமிழகத்திற்கு செயற்கையான நிதி நெருக்கடி தரும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது. ”

எனத் தெரிவித்துள்ளார்.