சென்னை

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீட் தேர்வு போலி மருத்துவர்களை உருவாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம்,

”போலி மருத்துவர்களைதான் நீட் நுழைவுத்தேர்வு உருவாக்குகிறது. ஆகையால் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

அதுமட்டுமின்றி வட இந்தியாவில் நீட் தேர்வெழுத வருபவர்களிடம் காதணி, மூக்குத்தியை அகற்றச்சொல்வதில்லை. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வெழுத வரும் மாணவர்களின் காதணி போன்றவற்றை அகற்றச்சொல்கின்றனர்.

அவர்கள்.மூக்குத்தியில் கூட ‘பிட்’ அடிப்பார்கள் என கழற்ற சொல்கிறார்கள்; அதே நேரத்தில் அவ்வளவு பெரிய ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒன்றும் செய்ய முடியாது எனஅவர்களே சொல்கின்றனர்

 இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்க தனியார் நிறுவனம் எதற்கு? இந்தியாவில் நிறுவனங்கள் இல்லையா? ஏன் அமெரிக்க நிறுவனம் தேர்வு நடத்த வேண்டும்?”

என்று கேட்டுள்ளார்.