திண்டுக்கல்

 நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக்வுக்கு கச்சத்தீவு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து.வாக்கு சேகரித்த போது.

”நாங்கள் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம். யார், யாருக்கோ வாக்கு அளித்து ஏமாந்த தமிழ் சொந்தங்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பி இந்த தேர்தலில் நிற்கிறோம். அடிப்படை அரசியல் மாற்றம் தேவை என்பதற்காகத் தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

நமக்கு காங்கிரஸ் நமக்கு அரை நூற்றாண்டுகள் பகை, ஆனால் பா.ஜ.க. நமக்கு 3,000 ஆண்டுகள் பகை. மோடி தேர்தலுக்காக ஊர், தெரு, வீடு வீடாக வந்து ஆதரவு கேட்டாலும் ஒரு வாக்கு கூட பா.ஜ.க.வுக்கு இல்லை என்கிற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும்.

நான் கச்சத்தீவை மீட்டுத்தாருங்கள் என்று 6 மாதங்களுக்கு முன்பே நான் கடிதம் எழுதினேன்; தேர்தல் வரும் போதுதான் கச்சத்தீவு நம்மிடம் இல்லை என்பது பா.ஜ.க.வுக்கு தெரியவருகிறதா?.என்னது காந்தி செத்துட்டாரா எனக் கேட்பது போல் இது உள்ளது.

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும்  பா.ஜ.க.வை எதிர்ப்பது பரம்பரையாக நீடிக்கிறது. வெள்ளையர்களை விட பேராபத்தான பாஜகவினர்.யாரிடமும் நான் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் இல்லை. ”

என்று கூறினார்.