சென்னை:

புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான  ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் கடந்த வாரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வரும் 5ந்தேதி, 6ந்தேதி மற்றும் 7ந்தேதிகளில் கருப்பு பேட்ஜ்  அணிந்து பணிக்கு வர தலைமைச் செயலக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்பட12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 21ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியதை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில்  வரும் 5ந்தேதி, 6ந்தேதி மற்றும் 7ந்தேதிகளில் கருப்பு பேட்ஜ்  அணிந்து பணிக்கு வர தலைமைச் செயலக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.