சென்னை

ரும் 28 ஆம் தேதி அன்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளன. 

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகளுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் கூட்டணிக் கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 28 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து முதல் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையிலான அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டுக் குழு பங்கேற்க உள்ளது.

குழுவில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் மோகன் பிரகாஷ் இடம் பெற்றுள்ளனர். பேச்சுவார்த்தையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள்.