ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் பகுதியில் கடல்நீர் உள்வாங்கியதால் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டின.

ராமேஸ்வரம் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.  கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.  இதனால் அப்பகுதி மீனவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கடலுக்குள் செல்லவில்லை.  அவர்கள் தங்கள் படகுகளைக் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் திடீரென கடல்நீர் 100 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கியது.  இவ்வாறு கடல்நீர் உள்வாங்கியதால் கடலில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் சாமி சிலைகள் தென்பட்டு வருகிறது.   குறிப்பாக அக்னி தீர்த்த பகுதியில் கடலுக்கு உள்ளே இருக்கும் சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிகின்றன.

மேலும் கடல் நீர் உள்வாங்கியதால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட படகுகள் தரை தட்டி நிற்கின்றன.  இந்த படகுகளை மீட்கும்  பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகள் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.