சென்னை:  சென்னையில் காணும் பொங்கல்  17ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் பாது​காப்​புப் பணி​யில் 16 ஆயிரம் போலீ​ஸார் ஈடுபட உள்​ளனர்.

நாடு முழுவதும்  வரும் 15ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, 16ந்தேதி மாட்டுப்பொங்கலும், 17ந்தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இந்த காணும் பொங்கல் வரும் 17-ம் தேதி (சனிக்​கிழமை) கொண்​டாடப்​படுகிறது. அன்​றைய தினம் பொது​மக்​கள்  குடும்பம் குடும்பதாக பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வது வழக்கம். அதாவது,  கடற்​கரை, பூங்கா, பொருட்காட்சி, ரிசார்ட், கோவில்  உட்பட பொழுது​போக்கு மையங்​களுக்கு  படையெடுப்பதார். இதையொட்டி, சிறப்பு பேருந்துகளும், அதிக அளவில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளும் இயக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், காணும் பொங்கல் தினத்தன்ற., மக்​கள் அதி​கள​வில் கூடும் இடங்​களில் எவ்​வித அசம்​பா​வித​மும் நிகழாமல் இருக்க சென்னை மாநகர காவல் ஆணை​யர் அருண் விரி​வான பாது​காப்பு ஏற்​பாடு​களை செய்​துள்​ளார். குறிப்​பாக நகர் முழு​வதும் 16 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு மற்​றும் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். இவர்​களு​டன் 1,500 ஊர்க்​காவல் படை​யினர் ஒருங்​கிணைந்து பணி​யாற்ற உள்​ளனர்.

காணும் பொங்கல் அன்று சென்னை மெரினா கடற்​கரை​யில் மட்​டும் சுமார் 3 லட்​சம் பேர் திரள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

எனவே உழைப்​பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்​காலிக காவல் கட்​டுப்​பாட்​டறை​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த பகு​தி​களில் உள்ள 7 சர்​வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்​களில் காவல் உதவி மையங்​கள் அமைக்​கப்​படும்.

அவசர மருத்​துவ உதவிக்​காக மருத்​து​வக் குழு​வினருடன் 8 ஆம்​புலன்ஸ் வாக​னங்​கள்.

 மீட்​புப் பணிக்​காக தீயணைப்பு வீரர்​கள் அடங்​கிய 2 தீயணைப்பு வாக​னங்​கள் தயார் நிலை​யில் நிறுத்தி வைக்​கப்​படும்.

மீட்​புப் பணிக்​காக மோட்​டார் படகு​கள் மற்​றும் 200-க்​கும் மேற்​பட்ட நீச்​சல் தெரிந்த தன்​னார்​வலர்​கள் தயார் நிலை​யில் இருப்​பார்​கள்.

மணற்​பரப்​பில் பாது​காப்பு:

 உழைப்​பாளர் சிலை முதல் கலங்​கரை விளக்​கம் வரை​ உள்ள மணற்​பரப்​பில் 13 தற்​காலிக காவல் கண்​காணிப்பு உயர் கோபுரங்​கள் அமைக்​கப்​பட்​டு, ஒவ்​வொரு உயர் கோபுரத்​தி​லும் 3 பேர் கொண்ட காவல் குழு​வினர் பணி​யமர்த்​தப்பட உள்​ளனர். அவர்​களுக்கு வாக்கி டாக்​கி, மெகா போன், பைனாகுலர் வழங்​கப்​படும்.

பைனாகுலர் மூலம் காவலர்​கள் கண்​காணித்து மெகா போன் மூலம் பொது​மக்​களுக்கு அறி​வுரைகளை வழங்​கு​வார்​கள். மேலும் 12 முக்​கிய இடங்​களில் கூடு​தலாக 13 சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டு, தற்​காலிக கட்​டுப்​பாட்​டறை​யில் உள்ள அகன்ற திரைகளில் கண்​காணிக்​கும் பணி மேற்​கொள்​ளப்​படும்.

காணும் பொங்கல் அன்று மெரி​னா​வில் குளிக்​கத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. பொது​மக்​கள் கடலில் இறங்​கு​வதைத் தடுக்க கடற்​கரை யோரம் தடுப்பு வேலிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் குதிரைப் படை​யினர் மற்​றும் மணற்​பரப்​பில் செல்​லக்​கூடிய சிறப்பு வாக​னம் மூலம் திருட்டு மற்​றும் குற்​றச் சம்​பவங்​கள் நடை​பெறாத வண்​ணம் கண்​காணிக்​கப்பட உள்​ளது.

பிரத்​யேக அடை​யாள பட்டை: கடற்​கரைக்கு பெற்​றோருடன் வரும் குழந்​தைகள் கூட்ட நெரிசலில் காணா​மல் போனால் அவர்​களை உடனடி​யாக மீட்​ப​தற்​காக குழந்​தைகள், சிறு​வர்​கள் மற்​றும் சிறுமிகளின் கைகளில் பிரத்​யேக அடை​யாளப் பட்டை (பேண்ட்) கட்​டி​விடப்பட உள்​ளது. குழந்​தைகளு​டன் வரும் பெற்​றோர்​களிடம் விவரங்​கள் பெறப்​பட்​டு, பிரத்​யேக அடை​யாளப் பட்​டை​யில் குழந்​தை​யின் பெயர், பெற்​றோர் பெயர், முகவரி மற்​றும் செல்​போன் எண் ஆகிய​வற்றை எழு​தி, குழந்​தைகளின் கைகளில் கட்டி அனுப்​பிவைப்​பார்​கள்.

ட்ரோன் கேம​ராக்​கள்: 

மெரினா கடற்​கரை மணற்​பரப்​பில் 4 ட்ரோன் கேம​ராக்​கள் மற்​றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்​கரை மணற்​பரப்​பில் 4 ட்ரோன் கேம​ராக்​கள் என மொத்​தம் 8 கேம​ராக்​கள் பயன்​படுத்​தப்​பட்​டு, தீவிர​மாக கண்​காணிக்​கப்​படும். மேலும் அதிக திறன் கொண்ட ஏஐ ட்ரோன் கேம​ராக்​கள் பயன்​படுத்​தப்​பட்டு அவை மூலம் கடலோர மணற்​பகு​தி​களில் உள்ள பொது​மக்​களுக்கு காவல் துறை​யின் எச்​சரிக்​கைத் தகவல்​கள் ஒலிபரப்​பப்​படும்.

இதர பாது​காப்பு ஏற்​பாடு​கள்: 

பொது​மக்​கள் அதி​கள​வில் கூடும் மற்ற முக்​கிய இடங்​களான கிண்டி சிறு​வர் பூங்​கா, தீவுத்​திடலில் உள்ள தமிழக அரசு சுற்​றுலா பொருட்​காட்​சி, செம்​மொழி பூங்கா உள்​ளிட்ட கேளிக்கை பூங்​காக்​கள் மற்​றும் இதர இடங்​களி​லும் தற்​காலிக காவல் உதவி மையங்​கள் அமைக்​கப்​பட்​டு, பொது​மக்​கள் பாது​காப்​பாக​வும் மகிழ்ச்​சி​யுட​னும் காணும் பொங்​கலைக் கொண்​டாட சிறப்​பான முறை​யில் பாது​காப்பு ஏற்​பாடு​களை போலீ​ஸார் செய்து வரு​கின்​றனர்.

இதே​போல் பைக் ரேஸ் மற்​றும் சாகசத்தை தடுப்​ப​தற்​காக கிண்​டி, அடை​யாறு, தரமணி, நீலாங்​கரை, துரைப்​பாக்​கம், மதுர​வாயல்​ உள்​ளிட்​ட பகு​தி​களில்​ கண்​காணிப்​பு சோதனை குழுக்​கள்​ அமைக்​கப்​பட்​டுள்​ளன.

[youtube-feed feed=1]