சென்னை:
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில் கொண்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் துவங்கும் நேரமும், முடிவடையும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும், 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.