பாட்னா

டும் குளிர் காரணமாக பாட்னாவில் வரும் 20 ஆம் தேதி வரை 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..

கடந்த சில நாட்களாக வட இந்திய மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் டில்லி, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் அதிகரித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. இந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இங்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே பீகார் மாநில அரசு, கடும் குளிர் காரணமாகப் பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 20 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது.