சென்னை: பள்ளி மாணாக்கர்கள் கையில் கையிறு, காப்பு,  கம்மல், செயின் அணியக் கூடாது என சமூக பாதுகாப்புத்துறை  பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறை மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதில்,  பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகங்களில் எந்த மாதிரி யான பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும்,  குறிப்பாக பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான கயிறும் கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. றந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும் என மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் வண்ண கயிறு அணிவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து  மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல  ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில்,

மாணவ மாணவியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும்.

மாணவ மாணவியர்கள் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டும்.

தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும்.

கை, கால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும் மற்றும் தலை முடியை சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.

காலில் காலணி அணிய வேண்டும்.

மாணவர்கள் ‘டக் இன்’ செய்யும் போது சீருடை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.

பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டும்.

பள்ளிக்கு செல்லும் போது அடையாள அட்டை அணிய வேண்டும்.

பிறந்த நாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வரவேண்டும்.

மாணவ மாணவியர்களுக்கு பள்ளிக்கு இருச்சக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை.

வகுப்பறையில் பாடங்களை கவனமாக கவனிக்க வேண்டும்.

ஆசிரியர் பேச்சை மாணவர்கள் கேட்க வேண்டும்.

மாணவ மாணவியர்கள் சீருடையில் பள்ளிக்கு வரும்போது கூடுதலாக கலர் டிரஸ் எடுத்து வரக்கூடாது.

வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அடிக்கடி கை, கால்கள் கழுவ வேண்டும்.

மாணவர்கள் எங்கு சென்றாலும் வரிசையாக செல்லவும்.

மாணவ மாணவியர்கள் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது மற்றும் எந்தவொரு Tattoo போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை .

மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லும் போது அவர்களின் சீருடை சட்டையிலுள்ள பொத்தான்களை கழட்டக்கூடாது.

வகுப்பறையில் நோட்டு புத்தகங்களை கிழித்தெறியக் கூடாது.

மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது காப்பு, கம்பல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் ஏதும் அணிய கூடாது.

மாணவ மாணவியர்கள் P.T. வகுப்பின்போது பள்ளி வளாகத்துள்ளேயே விளையாட வேண்டும். வெளியே செல்லுதல் கூடாது.

ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது

இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , “நன்னெறிப்பண்புகள் என்கிற தலைப்பில்  பள்ளி மாணவ மாணவியர்களிடம் கீழ்குறிப்பிட்டுள்ள நல்லொழுக்கக் கதைகள் எடுத்துரைக்க வேண்டும் என்றும்  ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

  • நீதிநெறி கதைகள்
  • தெனாலிராமன் கதைகள் . காப்பிய கதைகள்
  • நாட்டுப்பற்றை ஊட்டும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகள்
  • சுத்தம் கல்வி தரும்:
  • மாணவ மாணவியர்களிடையே அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல், மதிப்புகளை வளர்த்தல், அனுகுமுறைகளும் உத்திகளும் மாணவ மாணவியர்களிடையே ஊக்குவித்தல்.
  • பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களிடையிலான உறவுமுறைகளை மேம்படுத்துதல்.
  • மாணவ மாணவியர்களிடையே சுற்றுசூழல் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • மாணவ மாணவியர்களின் குடும்ப உறவுமுறைகளின் முக்கியத்துவம் குறித்த வழிப்புணர்வு ஏற்படுத்துதல்.” ஆகிய தலைப்புகளில் நன்னெறி பண்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.