சென்னை:
னமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு தமிழக அரசு பள்ளி விடுமுறை அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து குளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ததுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, சென்னையில் ஒரே நாளில் 20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. வெளியூர் மக்கள் சென்னைக்கு வரும் பயணத்தை 2 அல்லது 3 நாட்களுக்கு தள்ளி வைக்கலாம்.

மேலும், மாணவர்கள் நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன; தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.