நீலகிரி

ட்டியில் ஆர் எஸ் எஸ் கூட்டத்துக்காக ஒரு வாரம் பள்ளி விடுமுறை அளித்தமைக்கு விளக்கம் கோரி ஊட்டியில் மாவட்டக் கல்வி அலுவலர் அனுப்பி உள்ளார்.

ஆர் எஸ் எஸ் உயர்மட்டக் குழு கூட்டம் நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். உயர்மட்ட குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  தேசிய அளவிலான இந்த கூட்டம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன்  பகவத் தலைமையில்  கடந்த திங்கள்கிழமை தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடைபெறும் தனியார்ப் பள்ளிக்கு ஒரு வாரக் காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் முறையான அனுமதி இல்லாமல் தனியார்ப் பள்ளி விடுமுறை அறிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து உரிய விளக்கமளிக்கச் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தகுந்த விளக்கமளிக்காவிட்டால் பள்ளி நிர்வாகத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.