சென்னை:
திமுக தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அளித்துள்ள மனுவில், தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறான செய்தியை பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது, தீர்ப்பு இறுதியாகவில்லை என்றும் இரட்டை தலைமை பதவியே இன்று வரை தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளது குறிப்பிட்டுள்ளார்.

ஈபிஎஸ் அனுப்பிய புதிய நிர்வாகிகள் பட்டியல் நிபந்தனையுடனேயே தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்

உறுப்பினர்களை சேர்த்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி

தேர்தல் ஆணையம் மிக நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.