துரை

ன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலகம் சுமார் ரூ.206 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இன்று கலைஞர் நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். முதலில் நூலக வளாகத்தில் கருணாநிதிக்கு அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.