பள்ளி மாணவியைப் பலாத்காரம் செய்து படம் பிடித்து வெளியிட்ட மாணவர்கள்..

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவரின் மகள்  அங்குள்ள அரசுப் பள்ளியில்  பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும், மாணவிக்கும் தொடர்பு இருந்துள்ளது.

சம்பவத்தன்று  மாணவன் ,அங்குள்ள ஆற்றங்கரைக்கு  மாணவியை அழைத்துச் சென்றுள்ளான்.

அங்கு மாணவியை அவன், பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இந்த காட்சியை மாணவனுடன் படிக்கும் நண்பன் , செல்போனில் படம் பிடித்துள்ளான்.

செல்போனில் இந்த காட்சியைப் படம் பிடித்த மாணவன், அதனைத் தனது தன்னுடன் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இன்னொரு நண்பனின் செல்போனுக்கு அனுப்பி வைத்தான்.

அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன், சமுக வலைத்தளங்களில் அந்த ஆபாச காட்சியை வெளியிட, அந்த வீடியோ வைரலாக பரவி உள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த மாணவியின் தந்தையான லாரி ஓட்டுநர் அதிர்ந்து போனார்.

இது குறித்து அவர் குருபரபள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூன்று மாணவர்களையும் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவி, கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-பா.பாரதி.