சென்னை: ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில்  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பட்ஜெட்டிலும் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதுடன், பெண் கல்விக்காக பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான தேர்வு மூலம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர்  ,கூட்டுறவு சங்க துணை பதிவாளர், தீயணைப்பு மீட்பு துறை மாவட்ட அதிகாரி ஆகிய பணிகளுக்கான தேர்வு மற்றும்,   ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில் தமிழக அரசு  அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  ஐஏஎஸ் , குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளில் ஊக்கத்தொகை பெற,  தகுதி வாய்ந்த 39  மாணவர்களுக்கு தலா 50 ஆயிரம் அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.