டில்லி

மிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்தது.

தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார்.  ஆனால் மருத்துவ காரணங்களைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது., இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்ததை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற திங்கட்கிழமை நடைபெற உள்ளது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் மனுவை விசாரிக்கவுள்ளது.