சென்னை

தெற்கு ரயில்வே சென்னை சென்டிரல் – பித்ரகுண்டா இடையிலான ரயில் சேவையை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்துள்ளது.

 தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

விஜயவாடா பகுதியில் தண்டவாள பராமரிப்பு காரணமாக, சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு பித்ரகுண்டா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 17238) நாளை (30-ந்தேதி) முதல் நவம்பர் 3-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

திருப்பதியிலிருந்து காலை 6.50 மணிக்கு காட்பாடி புறப்படும் சிறப்பு ரயில் (07659) நாளை (30- ஆம் தேதி) முதல் நவம்பர் 5-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு ஜோலார்பேட்டை புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06417) நாளை (30-ந்தேதி) முதல் நவம்பர் 5-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணத்திலிருந்து காலை 7.10 மணிக்குக் கடப்பா புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06401) நாளை (30-ந்தேதி) முதல் நவம்பர் 5-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்குத் திருப்பதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16854) காட்பாடி-திருப்பதி இடையே நாளை (30-ந்தேதி) முதல் நவம்பர் 5-ந்தேதி வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.