டெல்லி:  மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் திமுக  14 எதிர்க்கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த  இரு வாரத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அதேபோல் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வியும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர். மேலும் பல எதிர்க்கட்சியினர் பல வழக்குகள் உள்ளன. அதை மீண்டும் தூசி தட்டி எடுக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ராஷ்டிரீய சமிதி, ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் ம உள்பட 14  எதிர்க்கட்சிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி  மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த  மனுவினை இரண்டு வாரங்களில் பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அபிஷேக் மனு சிங்வி தாங்கல் செய்துள்ள மனுவில்,  மத்தியஅரசு,  புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறருது.  ‘95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே உள்ளன. அதனால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மத்திய புலனாய்வு அமைப்புகளின் கைது நடவடிக்கைக்கு முந்தைய, பிந்தைய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்  என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.