டில்லி:

பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையை தொடர்ந்து, அவரது தண்டனைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

1998-ஆம் ஆண்டில் பாலகிருஷ்ணாரெட்டி பாஜகவில் இருந்தபோது,  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகனூரில் கர்நாடக எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின் போது அரசு பேருந்துகள் மீது  கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு இறுதியில் சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில்,  பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இதன காரணமாக அமைச்சர் பதவி  மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார் பாலகிருஷ்ண ரெட்டி. அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தனது தண்டனையை எதிர்த்து   பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தார். ஆனால், உயர்நீதி மன்றம் கைவிரித்த நிலையில், உச்சநீதி மன்றத்தை நாடினார்.

இதையடுத்து உச்சநீதி மன்றத்தின் கதவை தட்டினார் பாலகிருஷ்ணரெட்டி,  மனுவை  விசாரித்த உச்ச நீதிமன்றம் எற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க மறுத்த நிலையில்,  விசாரணையில் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடரும் என்று கூறியது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும்,  வழக்கு விசாரணைக்கு தடையில்லை என்றும் தெரிவித்துள்ளது.