பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டதாக நேற்று செய்தி பரவிய நிலையில் அது வதந்தி என குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக சினிமா துறையில் முன்னணி பாடகியாக வலம் வந்த அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் தான் இனி பாடப் போவதில்லை என ஓய்வை அறிவித்தார்.

நேற்று எஸ் ஜானகி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என ஒரு செய்தி மிக வேகமாக சமூக வலைதளத்தில் பரவியது.

இந்நிலையில் பலரும் அதற்கு மறுப்பு தெரிவித்து பதிவு செய்தனர் .

அவ்வகையில் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஜானகியம்மா நலமுடன் இருக்கிறார்! உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை? ஏன் பொய்யான செய்தியை பரப்புகிறார்கள்! என கோபத்தில் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .