கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது சத்யா சீரியல். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நிறைய ரசிகர்களை கொண்டது

ஆயிஷா சத்யா என்ற கேரக்ட்ரிலும் (ரவுடி பேபி) மற்றும் நடிகர் விஷ்ணு பிரபு (அமுல் பேபி) என்ற கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சத்யா சீரியலின் தயாரிப்பாளரான ஆர்.கே மனோகர் திடீரென்று உயிரிழந்துள்ளார்.

ஆர்.கே.மனோகர் மனைவிக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை பட்டுக்கோட்டையில் நடந்து வருவதாகவும், அவரை பார்த்து விட்டு கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு தனது சைலோ காரில் டிரைவருடன் கிளம்பியுள்ளார். திருச்சி அருகே சிறிய விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் தலையிலும் காயம் ஏற்பட்டதால் பட்டுக்கோட்டை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் ஞாயிறு காலை திடீர் என உயிரிழந்துள்ளார்.

இதே சீரியலில் பணிபுரிந்த எழுத்தாளர் லோபர் சாமி நான்கைந்து மாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார்.