கோவில்பட்டி: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி,  சிபிசிஐடி போலீசார் பல குழுக்களாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர்  அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது.
இந்நிலையில், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த காவலர் முத்துராஜை ஓட்டப்பிடாரம் அருகே பூசனுரில் போலீஸ் கைது செய்தனர்.