சென்னை

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்று சேர வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகம் எங்கும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நால் கொண்டாடப்பட்டு வருகிறது..  இதை முன்னிட்டு சென்னை தியாகராய் நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவப் படத்துக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது சசிகலா,

”மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் எம். ஜி.ஆர்  எனவே எம். ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் எந்த முறை கையாளப்பட்டதோ அதே முறையை நானும் கையாளுகிறேன்.

தற்போது தமிழகத்தில் நடக்க கூடிய ஆட்சியால் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சரியான திட்டம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.  

இது  கலைஞர் நூற்றாண்டுக்காக அவசரமாகத் திறக்க வேண்டும் என்று திட்டமிடாமல் திறக்கப்பட்டது. 

அனைவரும் திமுகவை வீழ்த்த அதிமுகவின் அனைவரும் ஒன்று சேர வேண்டும்  ஒரு கையில்  ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை,  ஆனால் எல்லா விரலும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். 

தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு பெரிய குளறுபடியாக உள்ளது.  தமிழக. அமைச்சர்கள் கூறும் மாட்டுக்கு மட்டுமே பரிசு என்று கூறுகிறார்கள்.” 

என தெரிவித்துள்ளார்.