சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் கோர்ட்டில் சரணடைய செல்கிறார். இன்று முற்பகல் 11.30 மணி அளவில் அவர் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து காரில் ஏறினார்.

பெங்களூர் செல்லும் முன்பாக கார் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தது.

அங்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா பின்னர் சமாதியை மூன்று முறை சுற்றி வந்தார்.

அப்புறம் என்ன நினைத்தாரே தெரியவில்லை… சமாதியில் விழுந்து வணங்கிய சசிகலா,  ஜெயலலிதா சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து, தனதுவாய்க்குள் முணுமுணுத்தவாறு சபதம் செய்தார். தாயின் மீது ஆணை என அவர் கூறி சபதம் செய்ததாக அருகேயிருந்தவர்கள் கூறுகிறார்கள்

இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.