வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பெங்களூரு சிறையில் இருந்த வி.கே.சசிகலா அண்மையில் விடுதலை ஆனார்.

சென்னையில் தங்கி இருந்த அவர், விடுதலைக்கு பிறகு முதன் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

தஞ்சாவூர் சென்றுள்ள சசிகலா, அங்குள்ள அருளானந்தம் நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சாமி கோயிலில் நேற்று அவர் வழிபாடு நடத்தினார்.

பிரசித்தி பெற்ற இந்த சிவன் கோயிலில் ஒரு மணி நேரம் இருந்த அவர், ஏழைகளுக்கு உணவு வழங்கினார்.

சசிகலாவின் கணவர் நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அதில் கலந்து கொள்ளும் சசிகலா மேலும் சில நாட்கள் தஞ்சையில் இருப்பார் என தெரிகிறது.

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

– பா. பாரதி