சசிகலா மறு சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் உச்சதநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

முதல் குற்றவாளியான ஜெயலலிதா அரசு ஊழியராக இருந்ததை வைத்தே வழக்கு தொடரப்பட்டதாகவும் அவர் இறந்து விட்ட காரணத்தால் வழக்கும் முடிவுக்கு வரும் என்றும் சசிகலா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மறு சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.