சென்னை,

சிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47.

இவர் சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகன். இன்று காலை திருவிடை மருதூர் கோவிலுக்கு சென்றபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மூத்த மகன்தான் மகாதேவன்.

ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தில் சர்வ அதிகாரத்துடன் தனது அத்தை சசிகலாவின் துணையுடன் வலம் வந்தவர் மகாதேவன்.

ஜெ. பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். பின்னர் ஜெயலலிதாவால் கட்சியிலும், வீட்டிலும் இருந்து விரட்டப்பட்டவர்.