பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலாவின் கைதி எண் 10711.  இளவரசியின் கைதி எண்:  10712.

சிறையில் தனக்கு ஏ.சி . அளிக்க வேண்டும் என்று சசிகலா கோரினார். ஆனால் அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த முறை ஜெயலலிதாவுடன் சிறையில் இருந்தபோது, ஏர்கூலர் அளிக்கப்பட்டிருந்தது.

அதே நேரம்,  தன்னையும், இளவரசியையும் ( தியானம் செய்ய வசதியாக!) ஒரே அறையில் அடைக்க வேண்டும் என்ற சசிகலாவின்  கோரிக்கையையும்  நீதிமன்றம் நீதிமன்றம் நிராகரித்தது.     மூவர் உள்ள அறையே இந்த இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் தனித்தனியாக.

தனி மருத்துவர் வேண்டும் என்றதையும் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிறை மருத்துவரே சிகிச்சை அளிப்பார் என்று தெரிவித்துவிட்டது.

மேலும், தான் சர்க்கரை நோயாளி என்பதால் மெத்தை வழங்க வேண்டும் என்றும், சுடுதண்ணீர்,  மற்றும் மேற்கத்திய பாணி டாய்லெட் ஆகிய வசதிகள் வேண்டும் என்றும், தொலைக்காட்சி  பெட்டி வேண்டும் என்றும் சசிகலா கோரினார். இவை அனைத்துக்கும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.