அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ம.நடராஜனுக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாவும் இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு ரத்தம், ஸ்கேன் போன்ற பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

இன்னும் மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து அவர் சிகிச்சை பெறவேண்டும் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.