சென்னை: சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து அவர் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா அவருடன் போயஸ் கார்டன் இல்லத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வந்தார். ஆகையால் அவருக்கு வாக்கு அந்த முகவரியில் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின் அந்த வீடு அரசுடைமையாக்கப்பட்டது.

அதன் காரணமாக சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. சிறை தண்டனை முடிந்து அவர் வெளியே வந்தும் தேர்தல் ஆணையத்தில் பெயர் சேர்க்க சொல்லி விண்ணப்பித்தும் அவர் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை.

அதனால் அவர் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதாக தகவல் வெளியானது. இந் நிலையில், வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாதது பற்றி தேர்தல் ஆணையத்தில் இன்று சசிகலா முறையீடு செய்துள்ளார். தேர்தலில் சசிகலா வாக்களிக்க தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர். ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.