பெங்களூரு,

ன்று பெங்களூர் வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம், சென்னையில் அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

இது முழுக்க முழுக்க அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும் அவர்களின் பொதுச செயலாளர் யார் என்பதை நாங்கள் தீர்மானிப்பது இல்லை இதுகுறித்து அவர்களே முடிவு எடுத்துக் கொள்ளட்டும் என்றும் கூறினார்.

மேலும் தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து கேட்டதற்கு,

அதிமுகவின் சட்டத்திட்டப்படி சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அதுகுறித்து அதிமுகவினர்தான் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.