சாப்ரா நகர், பீகார்

பீகாரின் சாப்ர நகர் மேயர் ராக்கி குப்தா தனது மூன்றாம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவியை இழந்துள்ளார்.

ராக்கி குப்தா பீகார் மாநில சாப்ரா நகர் மேயராக இருந்தவர் ஆவார். முன்னாள் மாடல் அழகி ஆன இவர் தனது பிரபலத்தை வைத்து அரசியலுக்குள் நுழைந்து மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  பொதுவாகத் தேர்தல் சமயங்களில், போட்டியிடும் வேட்பாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறை ஆகும்.

அதன்படி ராக்கியும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அவர் பிரமாண பத்திரத்தில், தனக்கு 2 குழந்தைகள் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.. ராக்கிக்கு உண்மையிலேயே 3 குழந்தைகள் இருப்பதால் பொய் சொல்லி பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார்.

நகரசபை சட்டத்தின் விதிகளின்படி, வேட்பு மனு பரிசீலனையின் போது, 2 குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர், தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிடுவார். எனவே ராக்கி தமக்கு 3 குழந்தைகள் ஒரு குழந்தையை மறைத்துவிட்டார். அவரது இந்த பிரமாண பத்திரம் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை.

பிறகு ராக்கிக்கு 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் முதல் குழந்தை ஷரியன்ஸ் (வயது 14) 2வது குழந்தை ஷிவான்ஷி (வயது 9) 3வது குழந்தை ஷரிஷ் (வயது 6). ஆவார்கள்

எதிர்க்கட்சியினர் இதை மோப்பம் பிடித்து விவகாரத்தையும் கிளப்பித் தேர்தல் ஆணையத்திற்கு ஆதாரத்துடன் புகார் அனுப்பினார்கள்.  ஆனால் எதிர்க்கட்சிகள் பிரச்சனையைப் பெரிதாக்கிய நிலையிலும் கூட, தனக்கு 2 குழந்தைகள் மட்டுமே இருக்கிறார்கள் என்று ராக்கி வாதிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் பொய்யான பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்த குற்றச்சாட்டின் பேரில், ராக்கி மீது தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சரண் மாவட்ட நீதிபதிக்குத் தேர்தல் பரிந்துரை செய்துள்ளது.

எனவே பீகார் நகரசபை  சட்டம் 2007-பிரிவு 18(1)ன் கீழ் ராக்கி குப்தா மேயர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்  இங்கு ராக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டதால், மேயர் பதவி காலியாகி உள்ளது.