நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.

ஆதாரங்களின்படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இவரின் மறைவால் பாலிவுட் திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

இதனிடையே சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து இந்தி திரையுலகினரை கடுமையாக சாடியுள்ளார் சுஷாந்த் சிங் தோழி ஸ்டைலிஸ்ட் சப்னா பாவ்னானி.இவர் தான் சுஷாந்த் சிங்கின் போட்டோ ஷூட்களுக்கும், அவருக்கும் தனிப்பட்ட ஸ்டைலிஸ்ட்டாக இருந்தார்.

“கடந்த சில வருடங்களில் சுஷாந்த் அனுபவித்த கஷ்டங்களில் எந்த ரகசியமும் இல்லை. சினிமாவில் இருக்கும் யாரும் அவருக்கு உறுதுணையாக நிற்கவும் இல்லை, அவருக்கு உதவ கைகொடுக்கவும் இல்லை. உண்மையில் சினிமாத்துறை எவ்வளவு மேம்போக்காக இருக்கிறது என்பதற்கு இன்று வரும் ட்வீட்களே சாட்சி. இங்கே யாரும் உங்களுக்கு நண்பன் இல்லை. ஆன்மா சாந்தி அடையட்டும்” என சுஷாந்த் சிங்கின் மறைவு குறித்து சப்னா பாவ்னானி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் .