சென்னை:
நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக “சன்சத்” புதிய தொலைக்காட்சி நாளை தொடங்கப் பட உள்ளது.

இந்த புதிய தொலைக்காட்சியைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாளை தொடங்கி வைக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில், மக்களவை தொலைக்காட்சி, மாநிலங்களவை தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து சன்சத் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலராக ரவி கபூர், கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

சர்வதேச ஜனநாயக தினமான நாளை இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.