மும்பை

சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் இந்தியா கூட்டணிக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை எனக் கூறி உள்ளார்.

இன்று மும்பை நகரில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமில்லாதது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறி உள்ளது.

அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் ,

”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையின் கீழ் நாடு பணியாற்ற விரும்புகிறது.  ஆனால் பாஜகவில் பயம் நிலவுகிறது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும்.

இந்த ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறுவது கடினம் மட்டுமல்ல, சாத்தியமில்லாதது. இந்தியா கூட்டணியில் நாட்டு பற்று, நாட்டை காக்க வேண்டும் என்ற உணர்வுடன் அனைவரும் உள்ளதால் கூட்டணியை யாரும் உடைக்க மாட்டார்கள். இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை”.

என்று கூறி உள்ளார்.