ன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால், சனி பகவான் கோவில் உள்ள திருநள்ளாறில் பக்கதர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு கிரகம் இடம் பெயர்தலை தான் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம்.

இந்த சனிபெயர்ச்சி தற்போது விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு நிகழ இருக்கிறது.

 ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும்.

அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். 

 சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் மிக எளிய பரிகாரங்கள் உள்ளன.

இந்நிலையில் இன்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகிறது. இதனையொட்டி இன்று சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். 

சனிப்பெயர்ச்சி விழா இன்று நிகழ இருப்பதை முன்னிட்டு, திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரபகவான் கோவிலில், பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

உலகிலேயே சனி பகவானுக்கு என தனி சன்னதி, திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் மட்டுமே உள்ளது. சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறில் அதிவிமரிசையாக கொண்டாடப்படும்.

அந்தவகையில் இன்று, காலை 10.01 மணிக்கு சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

திருநள்ளாறுக்கு வரும் பக்தர்கள் நளன் குளத்தில் குளிப்பது வழக்கம். நளன் குளத்தில் நீராடும் பக்தர்கள் தாங்கள் அணிந்திருக்கும் உடையை குளத்திலேயே விட்டுச் செல்வர். அதன்பிறகே சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வர்.